Friday, March 7, 2014

அவளுக்கும் தெரியும் ..


கண்ணாடி முன் நின்று
கண்மை இட்டு கொண்டே-அழகை அழகு செய்தாள்
அவளுக்கும் தெரியும் ...

வாரி முடித்த கூந்தலை பின்னலிட்டு
முந்தானையை இடுப்பில் சொருகிகொண்டு
குடைபிடித்து தெருவில் நடந்தாள்
அவளுக்கும் தெரியும் ...

அவன் வரும் முன்னே அவனுக்காக காதிருந்தாள்
தெரு முனையில்
அவன் வரும் வேளையில்- அழகை சரிசெய்து
சென்ட்டால் அவனோடு
அவளுக்கும் தெரியும் ..

காமத்து கட்டிலில் பந்தியிட தயாரானாள்
ராமன் முகம் கொண்ட ராவணனுக்கு.
அப்போதும் தெரியும் அவளுக்கு

அவன் இச்சை தீர அவளை
இம்சித்து முடித்து
அவள் மார்பில் சொருகி சென்ட்டன்
அவள் உழைப்பின் ஊதியத்தை

கண்ணீரோடு கண்ணாடி முன் நின்று
அழகை அழகு செய்தாள்
மீண்டும் குடைபிடித்து தெருவில் நடந்தால்
அவளுக்கும் தெரியும் ...

அவள் கண்ணிமை அழியும் என்று!!!!
வாரி முடித்த கூந்தல் கலையும் என்று!!!!
அவள் பெண்மை அடக்கப்படும் என்று!!!!
அவள் கற்ப்பு சூறையாட படும் என்று!!!!



எத்தனை உருவங்கள் பெண்ணே



எத்தனை உருவங்கள் பெண்ணே

அன்னையாக- என்னை கருவில் சுமந்தாயே!!!

சகோதரியாக- அடித்தாலும் பிடித்தாலும் அன்பின் அழகை உணர்தியவளே!!!!

மனைவியாக- என் சாதனையிலும் சோதனையிலும் என் தோள் கொடுத்து நடந்தவளே!!!!!

தோழியாக-தனிமையில் வாடிய பொழுது என் சோகத்தை பகிர்ந்து கொண்டவளே!!!!

மகளாக-என்னக்கவே இருந்தே பழகிப்போன பெண்ணே உனக்கு நன்டி செலுத்த எனக்கு கடவுள் கொடுத்த அக்ஷ்யபத்திரமே!!!!