Wednesday, March 16, 2016

அவள் சேலை கட்டி வரும் அழகு

சூரியன் மேகத்தினுள்   மறைவான் வெட்கத்தில்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

மரங்கள் தலை கவிழ்ந்து நிற்கும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

காத்தும் மூச்சிவிட மறந்து இருக்கும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

மண்  அவள் காலடியில்  மண்டியிடும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

இயற்பியல் தன் இயக்கத்தை நிறுத்தும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

தமிழும் தன் பங்குக்கு வார்த்தை இல்லாமல் திணறும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

ஆண் இனம் அடிமை இனமாய் மாறும்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

பிரமனும் பிறவி பயன் அடைவான்
அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டால்

நானோ
திறந்த விழி மூடவில்லை
நாவெல்லாம் நரம்பு அறுந்து பேச மறுக்கிறது
உடம்போ சிலிர்கிறது
சிரிக்கிறேன் பைத்தியம் போல்
உள்ளமோ நான் நான் என்பதை மறந்து நாணா படுகிறது


அவள் சேலை கட்டி வரும்
அழகை கண்டதால்


ஏக்கம்

வெள்ளை நிற சேலை கட்டி
வந்த வண்ண நிலவே
அந்த வானமும் உன் அழகில்
சொக்கி போனதே
இமயமும் சுக்குநூறாய்
இடிஞ்சி போனதே
இதயம் தனில் உன் நினைப்பு
இம்சை பண்ணுதே
எப்ப வருவேன்னு மனசும்
ஏங்கி கிடக்கே
சண்டையே போட்டாலும்
சம்சரமாய் ஆனவளே
உன் அன்பில் சிக்கி
என் உயிரை தொலைச்சேன்
கடைசிவரை கைகோர்த்து
நடக்கணும்
காலமெல்லாம்
உன் காலடியில் கிடந்துபேன்



Tuesday, March 8, 2016

என்னகென பிறந்தவளே

என்னகென பிறந்தவளே 
என் இதயத்தை அவளில் புதைத்தவளே 
என் உயிரை அவளில் சுமப்பவளே
என் சோகத்தை அவள் சோகமாய் பாவிப்பளே
என் தோள் சேர்ந்து என் வாழ்வோடு பயணிப்பவளே
என் காதல் மனைவியே உனக்கு என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்