எனக்கென வயசுக்குவந்த வான் மழையோ
உன்னில் நனைய உருகி நிற்கிறேன்
என்னில் வருவாயோ நம்மில் கரைய
மணல் அலை மேடாக உன் மேனி
மனமோ மக்கி கிடக்குது மடி மேல
தலை தூக்கி திரியுறேன்
தணித்து விட தரிசனம் போதுமடி
நம் இரவை பகலாக்க
சிம்மினி விளக்குல திரி போட்டு
தீ பந்தம் ஏத்திடவா
இடுப்பு கொடி மணி ஓசை கேட்டு
உண்டியலில் சேர்த்து வைத்த
சில்லறை துட்டைய் சிதறியது என் மனம்
காது மடலில் என் உதட்டால் போடும் கோலம்
தொட்டாய்சிணுங்கியாய் சிணுங்குகிறாய்
மூச்சு காத்து புயல் காத்தாய் வீச
மூர்ச்சை அடைந்து
மார்பு புதரில் புதைந்துவிட்டாய்
No comments:
Post a Comment