Friday, November 27, 2015

உண்மை காதல்

விட்டு கொடுத்துவிட்டு... 
விலகி கொள்கிறேன் அன்பே .. 
உனக்காக இல்லை உன்னை..
உண்மையாக நேசிக்கும் ஒரு இதயத்துக்காக

கணினி காதல்

பெண்ணே நீ ஒரு ‪#‎CSharp‬
உன் கண்ணோ ரெம்ப ஷார்ப்
உன் பார்வையோ ‪#‎Monitor‬
எண்ட உடாத பீட்டுரு
நம்ம காதல் ஒரு ‪#‎CPU‬
நான் போய்ரகூடாது ‪#‎ICU‬
எப்பயும் நீ இருக்குறது ‪#‎Internet‬
உன்னால கலண்டுச்சி என் நட்டு
உன் கூந்தல் பாக்க ‪#‎Cable‬
உன்னக்கு ரெம்பத்தான் லொள்ளு
நீ பிடிகிறது ‪#‎mouse‬
நமக்குள்ள இருக்குது லவ்சு
நீ அடிக்கிற ‪#‎Keyboard‬
உன் அப்பன் சுத்துறான் அருவாளோடு

வலி

நினைத்து நினைத்து சிரிக்கக்கூடிய
சந்தோஷமும்
காதல் தான்...!
யாரோ நம்மை நினைக்காததால்
அழக்கூடிய
வலியும்
காதல்தான்...!


-------------------------------------------------------

ஒருவரால் கிடைத்த மகிழ்ச்சி, அவர்
இல்லை என்றவுடன் இரண்டுமடங்கு
அதிகமாகிவிடுகிறது
மறக்கமுடியாத வலிகளாக...!!!

ஆசை

என் கடைசி ஆசை 
என்னவென்று கேட்டால்
உன் மடியில் கண் மூட வேண்டும் 
என்பேன்

நம்பிக்கை

என்றாவது ஒருநாளாவது என் அன்பையும் புரிந்துகொள்வாள் 
என் நம்பிக்கையில் விலகியே நிற்கிறேன்

இதயத்தில் வலிகளை சுமந்து கொண்டு

இதயத்தில் வலிகளை  சுமந்து கொண்டு
இதழ்களில்  புன்னகை  பூக்கிறேன்

கண்களில்  காதலை  வைத்துகொண்டு
கண்ணீர் வடிக்கிறேன்

உன்  நினைவுகளில் என்
இரவு தூக்கம்  தொலைக்கிறேன்

காதலியே உன்னை கரம் பிடிக்க  வேண்டும்
இல்லை  கரம்  பிடிப்பேன்  கல்லறையை .....

நினைவுகள்

என்னவளின் நினைவுகளில் இருந்து 
என்னை அழித்துவிடலாம் உங்கள் பாசத்தால்.

அவள் காதலையும் உண்மையான அன்பையும்
அவள் இறந்தாலும் அழிக்க முடியாது.

Friday, March 7, 2014

அவளுக்கும் தெரியும் ..


கண்ணாடி முன் நின்று
கண்மை இட்டு கொண்டே-அழகை அழகு செய்தாள்
அவளுக்கும் தெரியும் ...

வாரி முடித்த கூந்தலை பின்னலிட்டு
முந்தானையை இடுப்பில் சொருகிகொண்டு
குடைபிடித்து தெருவில் நடந்தாள்
அவளுக்கும் தெரியும் ...

அவன் வரும் முன்னே அவனுக்காக காதிருந்தாள்
தெரு முனையில்
அவன் வரும் வேளையில்- அழகை சரிசெய்து
சென்ட்டால் அவனோடு
அவளுக்கும் தெரியும் ..

காமத்து கட்டிலில் பந்தியிட தயாரானாள்
ராமன் முகம் கொண்ட ராவணனுக்கு.
அப்போதும் தெரியும் அவளுக்கு

அவன் இச்சை தீர அவளை
இம்சித்து முடித்து
அவள் மார்பில் சொருகி சென்ட்டன்
அவள் உழைப்பின் ஊதியத்தை

கண்ணீரோடு கண்ணாடி முன் நின்று
அழகை அழகு செய்தாள்
மீண்டும் குடைபிடித்து தெருவில் நடந்தால்
அவளுக்கும் தெரியும் ...

அவள் கண்ணிமை அழியும் என்று!!!!
வாரி முடித்த கூந்தல் கலையும் என்று!!!!
அவள் பெண்மை அடக்கப்படும் என்று!!!!
அவள் கற்ப்பு சூறையாட படும் என்று!!!!



எத்தனை உருவங்கள் பெண்ணே



எத்தனை உருவங்கள் பெண்ணே

அன்னையாக- என்னை கருவில் சுமந்தாயே!!!

சகோதரியாக- அடித்தாலும் பிடித்தாலும் அன்பின் அழகை உணர்தியவளே!!!!

மனைவியாக- என் சாதனையிலும் சோதனையிலும் என் தோள் கொடுத்து நடந்தவளே!!!!!

தோழியாக-தனிமையில் வாடிய பொழுது என் சோகத்தை பகிர்ந்து கொண்டவளே!!!!

மகளாக-என்னக்கவே இருந்தே பழகிப்போன பெண்ணே உனக்கு நன்டி செலுத்த எனக்கு கடவுள் கொடுத்த அக்ஷ்யபத்திரமே!!!!





Tuesday, January 28, 2014

இப்படி ஒரு காதலியோ காதலனோ கிடைத்தால் நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

இப்படி ஒரு காதலியோ காதலனோ கிடைத்தால்  நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள்/அவன் காத்திருப்பாள்/ன்

2) அவள்/அவன் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்/ன்

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள்
/ன் .

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்
/ன்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில்  அவள்/அவன் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள்
/ன். உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பா
ள்/ன்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்/ன்..

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள்/அவன் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்
/ன்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவள்/அவன் பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்
/ன்.