Wednesday, January 4, 2017
அவள் நினைவுகள்
எனக்கென வயசுக்குவந்த வான் மழையோ
உன்னில் நனைய உருகி நிற்கிறேன்
என்னில் வருவாயோ நம்மில் கரைய
மணல் அலை மேடாக உன் மேனி
மனமோ மக்கி கிடக்குது மடி மேல
தலை தூக்கி திரியுறேன்
தணித்து விட தரிசனம் போதுமடி
நம் இரவை பகலாக்க
சிம்மினி விளக்குல திரி போட்டு
தீ பந்தம் ஏத்திடவா
இடுப்பு கொடி மணி ஓசை கேட்டு
உண்டியலில் சேர்த்து வைத்த
சில்லறை துட்டைய் சிதறியது என் மனம்
காது மடலில் என் உதட்டால் போடும் கோலம்
தொட்டாய்சிணுங்கியாய் சிணுங்குகிறாய்
மூச்சு காத்து புயல் காத்தாய் வீச
மூர்ச்சை அடைந்து
மார்பு புதரில் புதைந்துவிட்டாய்
Subscribe to:
Posts (Atom)