Friday, November 27, 2015

ஆசை

என் கடைசி ஆசை 
என்னவென்று கேட்டால்
உன் மடியில் கண் மூட வேண்டும் 
என்பேன்

நம்பிக்கை

என்றாவது ஒருநாளாவது என் அன்பையும் புரிந்துகொள்வாள் 
என் நம்பிக்கையில் விலகியே நிற்கிறேன்

இதயத்தில் வலிகளை சுமந்து கொண்டு

இதயத்தில் வலிகளை  சுமந்து கொண்டு
இதழ்களில்  புன்னகை  பூக்கிறேன்

கண்களில்  காதலை  வைத்துகொண்டு
கண்ணீர் வடிக்கிறேன்

உன்  நினைவுகளில் என்
இரவு தூக்கம்  தொலைக்கிறேன்

காதலியே உன்னை கரம் பிடிக்க  வேண்டும்
இல்லை  கரம்  பிடிப்பேன்  கல்லறையை .....

நினைவுகள்

என்னவளின் நினைவுகளில் இருந்து 
என்னை அழித்துவிடலாம் உங்கள் பாசத்தால்.

அவள் காதலையும் உண்மையான அன்பையும்
அவள் இறந்தாலும் அழிக்க முடியாது.

Friday, March 7, 2014

அவளுக்கும் தெரியும் ..


கண்ணாடி முன் நின்று
கண்மை இட்டு கொண்டே-அழகை அழகு செய்தாள்
அவளுக்கும் தெரியும் ...

வாரி முடித்த கூந்தலை பின்னலிட்டு
முந்தானையை இடுப்பில் சொருகிகொண்டு
குடைபிடித்து தெருவில் நடந்தாள்
அவளுக்கும் தெரியும் ...

அவன் வரும் முன்னே அவனுக்காக காதிருந்தாள்
தெரு முனையில்
அவன் வரும் வேளையில்- அழகை சரிசெய்து
சென்ட்டால் அவனோடு
அவளுக்கும் தெரியும் ..

காமத்து கட்டிலில் பந்தியிட தயாரானாள்
ராமன் முகம் கொண்ட ராவணனுக்கு.
அப்போதும் தெரியும் அவளுக்கு

அவன் இச்சை தீர அவளை
இம்சித்து முடித்து
அவள் மார்பில் சொருகி சென்ட்டன்
அவள் உழைப்பின் ஊதியத்தை

கண்ணீரோடு கண்ணாடி முன் நின்று
அழகை அழகு செய்தாள்
மீண்டும் குடைபிடித்து தெருவில் நடந்தால்
அவளுக்கும் தெரியும் ...

அவள் கண்ணிமை அழியும் என்று!!!!
வாரி முடித்த கூந்தல் கலையும் என்று!!!!
அவள் பெண்மை அடக்கப்படும் என்று!!!!
அவள் கற்ப்பு சூறையாட படும் என்று!!!!



எத்தனை உருவங்கள் பெண்ணே



எத்தனை உருவங்கள் பெண்ணே

அன்னையாக- என்னை கருவில் சுமந்தாயே!!!

சகோதரியாக- அடித்தாலும் பிடித்தாலும் அன்பின் அழகை உணர்தியவளே!!!!

மனைவியாக- என் சாதனையிலும் சோதனையிலும் என் தோள் கொடுத்து நடந்தவளே!!!!!

தோழியாக-தனிமையில் வாடிய பொழுது என் சோகத்தை பகிர்ந்து கொண்டவளே!!!!

மகளாக-என்னக்கவே இருந்தே பழகிப்போன பெண்ணே உனக்கு நன்டி செலுத்த எனக்கு கடவுள் கொடுத்த அக்ஷ்யபத்திரமே!!!!





Tuesday, January 28, 2014

இப்படி ஒரு காதலியோ காதலனோ கிடைத்தால் நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

இப்படி ஒரு காதலியோ காதலனோ கிடைத்தால்  நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள்/அவன் காத்திருப்பாள்/ன்

2) அவள்/அவன் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்/ன்

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள்
/ன் .

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்
/ன்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில்  அவள்/அவன் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள்
/ன். உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பா
ள்/ன்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்/ன்..

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள்/அவன் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்
/ன்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவள்/அவன் பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்
/ன்.

Saturday, December 29, 2012

அரளி விதை

தனிமையில் இருந்தேன் உன்னோடு
தவிப்புகள் என் மனதில்
தருவாளா ஒரு முத்தம்தனை
தந்தாள் உதட்டில் அல்ல
கைகளில்

காதல் முத்தமா அது?
அல்ல அன்பு முத்தமா!!!

விளையாட்டாய் தந்த முத்தம்
வினை விதைத்தது காதல் வித்துகளை

வித்துகள் செடியகின
கண்ணீர் விட்டு வளர்த்தேன் காதல் செடியை

செடி மரமாகியது
இரத்தம் சிந்தி வளர்த்தேன் காதல் மரத்தை

கனிந்ததா காதல் பழம்?
கனிந்தது ருசித்தும் பார்த்தேன்

சில ஆண்டுகளுக்கு பிறகு

கல்லறையில் கண்மூடி தூங்கி கொண்டிருந்தேன்
அவள் மூச்சுகாற்றுபட்டு எழுந்து பார்த்தேன்

காதல் கணவனோடு கைகோர்த்து நின்றாள்
என் மன அஞ்சலிக்காக 
அழகான ரோஜாவை என் பாதத்தில் வைத்தாள்

என் அழகிய காதலியே -அன்று
அரளி விதையை விதைத்தாயே
இன்று ரோஜாவை விதைக்கிறாயே
இதை அன்றே விதைதிருக்கலமே
நானும் கல்லறயை கரம் பிடித்திருக்கமாட்டேனே

அழகும் அருவெருப்பும்

அழகும் அருவெருப்பும்


ஆடையில்லாமல் பிறந்தாயே இளைஞ்சனே
ஆனாலும் அழகாகவே தெரிந்தாய்
அன்று...

ஆடையில்லாமல் கிடக்கிராயே இளைஞ்சனே
டாஸ்மார்க் போதையில் அருவெறுப்பாய் தெரிகிறாய்
இன்று.....
காதல் பார்வை


சுட்டெரிக்கும் காதல் பார்வை
ஜித்தன் ஆக்கியது என்னை
அடைக்கலம் தருவாயோ பெண்ணே!!!
பித்தன் ஆகும் முன்னே!!!