Friday, February 5, 2016

ஆசை


உன் வீ ட்டில் உன் கால் பிடித்து விளையாட ஆசை !!!
நீ காப்பி எடுத்து வரும் போது உன் விரல் நுனி பட ஆசை !!!
நீ என் தோள் பிடித்து நடக்க ஆசை !!!

பேருந்தில் உன் பின்னல் நின்று வர ஆசை !!!

ஒரே நேரத்தில் இருவரும் சேர்ந்து இரவு நிலா பார்க்க ஆசை !!!

குழந்தை போல் உன் மடியில் படுக்க ஆசை !!!
உன் காதுமடல் அருகே முத்தம் கொடுக்க ஆசை !!!
கன்ன குழியில் கை விரல் விட்டு ஆழம் பார்க்க ஆசை !!!
முண்டகண் பார்வையில் மூழ்கிவிட ஆசை !!!
ஓர கண் பார்வையில் உயிர் விட ஆசை !!!
உன்னை கட்டி அணைக்க ஆசை !!!
முத்த மழையில் நனைக்க ஆசை !!!
உதட்டில் என் உதடு பதிக்க ஆசை !!!
உன் மார்பில் புதைந்து கொள்ள ஆசை !!!
என் புதரில் உன்னை மறைத்து கொள்ள ஆசை !!!
தாமரை மலரின் தரிசனம் பார்க்க ஆசை !!!
சிம்னி வெளிச்சத்தில் சிப்பிக்குள் முத்து பார்க்க ஆசை !!!
உன்னோடு தண்ணிர் பிடித்து வர ஆசை !!!
உச்ச போகும் போது துணைக்கு வர ஆசை !!!
உன் தலை கோதி தூங்க வைக்க ஆசை !!!
நீ தூங்க நான் முழித்து இருக்க ஆசை !!!
காலை சோம்பல் முறிக்கும் அழகை ரசிக்க ஆசை !!!
மாமா இன்னும் ஒரு 5 நிமிடம் என்று கொஞ்ச வைக்க ஆசை !!!
என் உதட்டால் ஊட்டி விட ஆசை !!!
உன் கை பிடிச்சி மழை நேர வேளையில் சுற்றி வர ஆசை !!!
என் ஆடை விலகாமல் நீ பிடித்து வர ஆசை !!!
இரவெல்லாம் உன்னோடு பேச ஆசை !!!
உன் மார்பில் சாய்ந்து அழ ஆசை !!!
தாலி கட்டி மனைவியாக்க ஆசை !!!
கெஞ்சி கெஞ்சி கொஞ்சி பேசிட ஆசை !!!
தூங்கும் பொது காதோரம் பேச ஆசை !!!
பைக் பயணத்தில் பின் கழுத்தில் முத்தம் வங்க ஆசை !!!
மொத்தத்தில்
உன்னோடு உன்னோடு வாழ்ந்து மடிய ஆசை !!!


Friday, November 27, 2015

உண்மை காதல்

விட்டு கொடுத்துவிட்டு... 
விலகி கொள்கிறேன் அன்பே .. 
உனக்காக இல்லை உன்னை..
உண்மையாக நேசிக்கும் ஒரு இதயத்துக்காக

கணினி காதல்

பெண்ணே நீ ஒரு ‪#‎CSharp‬
உன் கண்ணோ ரெம்ப ஷார்ப்
உன் பார்வையோ ‪#‎Monitor‬
எண்ட உடாத பீட்டுரு
நம்ம காதல் ஒரு ‪#‎CPU‬
நான் போய்ரகூடாது ‪#‎ICU‬
எப்பயும் நீ இருக்குறது ‪#‎Internet‬
உன்னால கலண்டுச்சி என் நட்டு
உன் கூந்தல் பாக்க ‪#‎Cable‬
உன்னக்கு ரெம்பத்தான் லொள்ளு
நீ பிடிகிறது ‪#‎mouse‬
நமக்குள்ள இருக்குது லவ்சு
நீ அடிக்கிற ‪#‎Keyboard‬
உன் அப்பன் சுத்துறான் அருவாளோடு

வலி

நினைத்து நினைத்து சிரிக்கக்கூடிய
சந்தோஷமும்
காதல் தான்...!
யாரோ நம்மை நினைக்காததால்
அழக்கூடிய
வலியும்
காதல்தான்...!


-------------------------------------------------------

ஒருவரால் கிடைத்த மகிழ்ச்சி, அவர்
இல்லை என்றவுடன் இரண்டுமடங்கு
அதிகமாகிவிடுகிறது
மறக்கமுடியாத வலிகளாக...!!!

ஆசை

என் கடைசி ஆசை 
என்னவென்று கேட்டால்
உன் மடியில் கண் மூட வேண்டும் 
என்பேன்

நம்பிக்கை

என்றாவது ஒருநாளாவது என் அன்பையும் புரிந்துகொள்வாள் 
என் நம்பிக்கையில் விலகியே நிற்கிறேன்

இதயத்தில் வலிகளை சுமந்து கொண்டு

இதயத்தில் வலிகளை  சுமந்து கொண்டு
இதழ்களில்  புன்னகை  பூக்கிறேன்

கண்களில்  காதலை  வைத்துகொண்டு
கண்ணீர் வடிக்கிறேன்

உன்  நினைவுகளில் என்
இரவு தூக்கம்  தொலைக்கிறேன்

காதலியே உன்னை கரம் பிடிக்க  வேண்டும்
இல்லை  கரம்  பிடிப்பேன்  கல்லறையை .....

நினைவுகள்

என்னவளின் நினைவுகளில் இருந்து 
என்னை அழித்துவிடலாம் உங்கள் பாசத்தால்.

அவள் காதலையும் உண்மையான அன்பையும்
அவள் இறந்தாலும் அழிக்க முடியாது.

Friday, March 7, 2014

அவளுக்கும் தெரியும் ..


கண்ணாடி முன் நின்று
கண்மை இட்டு கொண்டே-அழகை அழகு செய்தாள்
அவளுக்கும் தெரியும் ...

வாரி முடித்த கூந்தலை பின்னலிட்டு
முந்தானையை இடுப்பில் சொருகிகொண்டு
குடைபிடித்து தெருவில் நடந்தாள்
அவளுக்கும் தெரியும் ...

அவன் வரும் முன்னே அவனுக்காக காதிருந்தாள்
தெரு முனையில்
அவன் வரும் வேளையில்- அழகை சரிசெய்து
சென்ட்டால் அவனோடு
அவளுக்கும் தெரியும் ..

காமத்து கட்டிலில் பந்தியிட தயாரானாள்
ராமன் முகம் கொண்ட ராவணனுக்கு.
அப்போதும் தெரியும் அவளுக்கு

அவன் இச்சை தீர அவளை
இம்சித்து முடித்து
அவள் மார்பில் சொருகி சென்ட்டன்
அவள் உழைப்பின் ஊதியத்தை

கண்ணீரோடு கண்ணாடி முன் நின்று
அழகை அழகு செய்தாள்
மீண்டும் குடைபிடித்து தெருவில் நடந்தால்
அவளுக்கும் தெரியும் ...

அவள் கண்ணிமை அழியும் என்று!!!!
வாரி முடித்த கூந்தல் கலையும் என்று!!!!
அவள் பெண்மை அடக்கப்படும் என்று!!!!
அவள் கற்ப்பு சூறையாட படும் என்று!!!!



எத்தனை உருவங்கள் பெண்ணே



எத்தனை உருவங்கள் பெண்ணே

அன்னையாக- என்னை கருவில் சுமந்தாயே!!!

சகோதரியாக- அடித்தாலும் பிடித்தாலும் அன்பின் அழகை உணர்தியவளே!!!!

மனைவியாக- என் சாதனையிலும் சோதனையிலும் என் தோள் கொடுத்து நடந்தவளே!!!!!

தோழியாக-தனிமையில் வாடிய பொழுது என் சோகத்தை பகிர்ந்து கொண்டவளே!!!!

மகளாக-என்னக்கவே இருந்தே பழகிப்போன பெண்ணே உனக்கு நன்டி செலுத்த எனக்கு கடவுள் கொடுத்த அக்ஷ்யபத்திரமே!!!!